tamilnadu

img

தமிழகத்தில் கொத்தடிமைகள் கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை

சென்னை, அக்.18- தமிழக அரசால் பல்வேறு மாவட்டங்க ளில் கொத்தடிமை முறையில் இருந்து விடு விக்கப்பட்டவர்கள் சென்னையில் சங்கமித்தனர். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழா வில் தமிழக அரசால் வெவ்வேறு மாவட்டங்க ளில் விடுவிக்கப்பட்டு மறுவாழ்வை பெற்ற கொத்தடிமை தொழிலார்கள் தங்கள் விடி யலை கொண்டாடும் வகையில்  திரண்டனர். பாலைவன பூக்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  அமைச்சர் க.பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தமிழக அரசு தொடர்ந்து கொத்தடிமை தொழில் முறையை ஒழிப்பதற்கான நடவ டிக்கைகளை இன்னும் துரிதப்படுத்தும் வித மாக மாநில அளவில் கொத்தடிமைகள் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ப தோடு கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் 1976  நடைமுறைக்கு வந்த பிப்ரவரி 9ஆம் தேதியை கொத்தடிமை முறை ஒழிப்பு தின மாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய இன்டர்நேஷ்னல் ஜஸ்டீஸ் மிஷன் நிர்வாகி புகழ்செல்வன் கேட்டுக்கொண்டார். கொத்தடிமை இல்லாத தமிழகத்தை உரு வாக்க தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து  நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு அரசுடன் இணைந்து தொடர்ந்து செயல்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார். கொத்தடிமை தொழில் முறை ஒழிப்புச் சட்டம் வெளிவந்து  44 ஆண்டுகள் ஆனபின்பும் இந்தக்கொடுமை  இன்னமும் நம்நாட்டில் தொடர்வது வேத னைக்குரிய ஒன்று நிகழ்ச்சியில் பேசிய பலர் குறிப்பிட்டனர்.