திருவள்ளூர், ஜூலை 1- திருவள்ளூர் மாவட்டம் பழைய கும்மிடிப்பூண்டி கிராமம், பேரூராட்சி நிலைக்கு உயர்த்தப்பட்டது. தற்போது சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 15-வார்டுகள் உள்ளன.இவற்றில் 7 முதல் 13 வரை உள்ள வார்டுகளில் குடியிருப்போர் சத்திரம் ஜாரி வகைப்பாட்டில் வருகின்றனர். சத்திரம் ஜாரி வகைப்பாட்டில் வரும் நிலங்கள் சில போக்குவரத்து சாலையையொட்டி அமைந்திருப்பதால் வணி கர்களின் கடைகள், குடி யிருப்புக்கள் என ஆயிரத்தி ற்கும் மேற்பட்டவர்கள் கடந்த 70-ஆண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் குடியிருந்து வருகின்றனர். இங்கு சாலை வசதி, மின்சாரம், குடிநீர், மருத்து வம் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.குடிதண்ணீர், சொத்து வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1997-க்கு பின்னர் அரசு நிலங்கள் என்ற வகைப்பாட்டில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யக் கூடாது. என்ற அறிவிப்பின் மூலம் சத்திர ஜாரி வகைப்பாட்டில் உள்ள இடங்களில் பத்திரப் பதிவு இல்லாமல் நிலங்கள், வீடுகள் கைமாறுகிறது.இத னால் அரசிற்கு பெரும் வரு வாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் குடிமனை பட்டாவும் பெற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சத்திரம் ஜாரி வகைப்பாட்டில் பயனின்றி வாழும் நிலையில் உள்ளனர்.இந்த சாதாரண மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியை நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார், குடி யிருப்போர் நலச் சங்கத் தலைவர் பி.துளசிநாராய ணன், செயலாளர் டி.கே.ராஜா, துணைத் தலைவர் ஆர்.ரமேஷ், பொருளாளர் எஸ். லலித்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.