புதுச்சேரி,ஜூன்.25- மத்திய அரசின் 2019 புதிய தேசிய வரைவு கல்விக் கொள்கை அறிக்கை முழுமையாக கைவிட வேண்டும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், சார்பில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்வி வரைவு கல்விக் கொள்கை 2019 குறித்து சிறப்புக் கருத்தரங்கம் புதுவையில் உள்ள 16 அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. புதுவை மாநில பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கி னார். பொதுபள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு அறிவியல் இயக்க கல்வியாளர் முனைவர் மாதவன் மற்றும் தமிழ்நாடு-புதுவை பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த முன்னனித் தலைவர்கள், ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மாண வர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட திரளானோர் கருத்த ரங்கில் கலந்துகொண்டனர்.
தீர்மானம்
தேசிய வரைவு கல்விக்கொள்கை அறிக்கை – 2019யை மத்திய பாஜக அரசு முழுமையாக கைவிட வேண்டும், அறிக்கை மீது கருத்துக்கள் பகிர ஜூன் 30 என்பதான காலக்கெடுவை மேலும் நாட்கள் நீட்டிக்க வேண்டும். தேசிய வரைவு கல்விக்கொள்கை அறிக்கை – 2019 இது போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகளை மாநில மொழிகளில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மா னங்களை புதுவை முதல்வர், கல்வி அமைச்சர், கல்வித் துறை செயலர், இயக்குநர் மற்றும் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.