tamilnadu

img

விரட்டும் தெரு நாய்கள்: அலறும் ரயில் பயணிகள்

சென்னை, ஜூலை 29- சென்னை மாநகரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் மற்றும் வீதியில் திரியும் மாடுகளால் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. அரும்பாக்கத்தில், சிறுமியை மாடு முட்டிய சம்பவத்திற்குப் பிறகு, சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும்  நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியதுஆனாலும் போதிய பலன் தரவில்லை.  காரணம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கவனம் போது மானதாக இல்லை. இதன் விளைவு, இப்போதும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் மட்டுமல்லாது பகலிலும் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

இது ஒருபக்கம் இருந்தாலும், தற்போது  தெருவுக்கு தெரு நாய்கள் பெருக்கம்  அதிகரித்துவிட்டது. குறிப்பாக, இருசக்கர  வாகனங்களில் செல்வோரை தெருநாய் கள் கூட்டமாக துரத்துகிறது. இதிலிருந்து தப்பிக்கவும், பாதுகாப்பாக வாகனம் ஓட்ட முடியாமல் பதற்றமடைந்து சிலர் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. நடந்து செல்வோரின் நிலைமையோ பரிதாபமாக உள்ளது.

தெரு நாய்கள் தொல்லையால் குழந் தைகளை  நாய்கள் கடித்து குதறும் சம்ப வங்களும் சமீப காலமாக அதிகரித்து வருவது மாநகர மக்களிடம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சாலைகளில் மட்டுமல்ல எழும்பூர் ரயில் நிலைய நடைபாதைகளிலும் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. அண்மையில் ரயில் நிலைய நடைமேடை யில் ஜாலியாக திரிந்து கொண்டிருந்த  15க்கும் ஏற்பட்ட நாய்கள் ரயில் பயணிகளை விரட்டி சென்ற காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.  சாலைகளில் மட்டுமல்ல, பெரும்பாலான ரயில் நிலையங்கள் பேருந்து நிலை யங்களிலும் அதிகரித்து வரும் நாய்  தொல்லையை கட்டுப்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.