tamilnadu

img

ஏலகிரிமலையில் சாலைக்காக பழமையான மரங்கள் அகற்றம்

வேலூர், ஜூன் 25- வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே, ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரிமலை உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் இதமான வெப்ப நிலை நிலவுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மலைக்கு சென்று  வருகின்றன. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து, ஏலகிரி மலை செல்ல, ஒரே சாலை மட்டும் உள்ளது. இங்கு இரண்டா வது வழித்தடம் அமைத்து, சாலை போட வசதி இல்லாததால்,  சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக பொன்னேரியில் இருந்து, மலையடிவாரம் வரையுள்ள, 2 கி.மீ., தூர சாலை  அகலப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.  இதற்காக இரண்டு இடங்களில், சிறு பாலம் அமைக்கப் பட்டு, சாலையோரத்தில் இருந்த, 100 ஆண்டுகள் பழமை யான, 25 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால்  ஏலகிரி மலைக்குச் செல்லும் வழியில் உள்ள நூற்றுக்கணக் கான மரங்கள் வெட்டப்படும் நிலை ஏற்படும். இதனால் மலை யின் இயற்கை வளம் பாதிக்கப்படும் என்பதால், சாலையை  அகலப்படுத்துவதை காரணம் கூறி, மரங்களை வெட்ட வேண்டாம் என, சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.