தி.மலையில் மத நல்லிணக்க ரமலான்
மத நல்லிணக்க ரமலான் நிகழ்ச்சி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, திருவண்ணாமலை மாவட்டக்குழு சார்பாக வந்தவாசி அருகே மலையிட்டான்குப்பம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் அப்துல்காதர் வரவேற்றார். இந்நிகழ்விற்கு சிபிஎம் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு எம்.வீரபத்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து, வாலிபர் சங்க மாவட்ட பொரு ளாளர் சுகுமார், மற்றும் இந்திய குடியரசு கட்சியின் மாநில பொறுப்பாளர் வந்தை மோகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் பீர் முகமது, மனிதநேய மக்கள் கட்சி யாசர் தாஹா, பள்ளிவாசல் நிர்வாகி கலியுல் ரகுமான், ஐமுமுக நகர தலைவர் முகமது யூசுப், இடைக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, ஆனந்தன், சேட்டு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக ஷாஜஹான் நன்றி கூறினார்.
அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள்
ஒன்றிய அரசுக்கு வாலிபர் சங்கம் கண்டன கடிதம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரயில்வே தேர்வு வாரி யத்தால் நடத்தப்படும் தமிழக மாண வர்களுக்கு தெலங்கானா உள்ளிட்ட தொலை தூரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, அரியலூர் தபால் நிலையத்திலிருந்து ஒன்றிய அரசுக்கு கண்டன கடிதங்களை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் ரயில் ஓட்டுநர்காலிப்பணியிடங்களுக்கான தேர்வை ரயில்வே தேர்வு வாரியம் ரயில்வே ரெக்வெர்மென்ட் போர்டு நடத்தும் கணினி அடிப்படையிலான தேர்வு 1ல் தமிழகத்தைச் சேர்ந்த 6000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான சிபிடி தேர்வு 2ஐ வருகின்ற மார்ச் 19ஆம் தேதி ரயில்வே தேர்வு வாரியம் நடத்த உள்ளது. இத்தேர்வை எழுதுவதற்கான தேர்வு மையங்கள் பெரும்பாலான மையங்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே அண்டை மாநிலங்களில்,1500 க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் பயணம் செய்து எழுதுவது போல் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் நீண்ட பயணம் செய்து தேர்வு எழுத முடியாத சூழலும், மேலும் நிதிச் சுமை யும் கடுமையான அலைச்சல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக கூடிய நிலை மையை உருவாக்கியுள்ளது எனவே ஒன்றிய ரயில்வே அமைச்சகம் குறிப்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக இதன் மீது தலையீடு செய்து தமிழ்நாட்டு இளை ஞர்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே தேர்வு எழுதக்கூடிய வகையில் மையத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ரிஷி வந்தியம் ஒன்றியக்குழு சார்பாக அரியலூர் தபால் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டம் ஒன்றிய பொரு ளாளர் ஏ.விஷ்ணு குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலை வர் மு.சிவக்குமார், முன்னாள் மாவட்ட பொருளாளர் இரா.பூமாலை கலந்துக் கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ராம்குமார் நன்றி கூறினார்.