tamilnadu

img

நிவாரணம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை:
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கியது தொடர்பாக தமிழக அரசு விரிவாக பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுவரை தமிழக அரசு நிவாரண தொகையாக 1000 ரூபாயை குடும அட்டைகளுக்கு வழங்கியது போதுமானதாக இல்லை என்றும்   வேலை வாய்ப்புகள் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்ட அனைத்து  குடும் பங்களுக்கும் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர்  எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது  அப்போது அரசு தரப்பில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நல வாரியங்களின் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.இதை பதிவு செய்த நீதிபதிகள்,தமிழகம் முழுவதும் இதுவரை வழங்கப் பட்ட நிவாரணம் குறித்து விரிவாக பதிலளிக்குமாறு உத்தரவிட்டு,வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

;