tamilnadu

img

குளிர் சாதன பெட்டி வெடித்து 3 பேர் பலி

தாம்பரம் அருகே குளிர்சாதன பெட்டி வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம் அருகே சோலையூரில் நேற்று இரவு பிரசன்னா என்பவர் வீட்டில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பிரசன்னா அவரது மனைவி அர்ச்சனா மற்றும் அவரது அம்மா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.