கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு கொரோனா ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் ரூ.400 லிருந்து ரூ.250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அல்லாதவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் ரூ.700-லிருந்து ரூ.400-ஆக குறைத்து அறிவித்துள்ளது.
மேலும், குழு மாதிரிகளுக்கான கட்டணம் ரூ.150 லிருந்து ரூ.75-ஆக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.