சென்னை, பிப். 22 - ஏசி விற்பனை, பழுதுபார்ப்பு மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஏர்கன்டிஷன், ரெப்ரிஜிரே ஷன், இன்ஜினியர்ஸ் அண்டு டெக்னிஷி யன்ஸ் யூனியனின் சென்னை மாவட்ட 9வது மாநாடு சனிக்கிழமையன்று (பிப்.22) கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஏர்கன்டிஷன் விற் பனை மீதான ஜிஎஸ்டி-யை 28 விழுக்காட்டி லிருந்து 18 விழுக்காடாகவும், பழுதுபார்ப்பு மீதான ஜிஎஸ்டி-யை 18 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாகவும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அர்பன்கிளாப், வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஏசி விற்பனை, பொருத்துதல், பழுதுபார்த்தல் போன்ற பணிகளை ஆன்லைன் மூலம் செய்வதை தடுக்க வேண்டும், கட்டுமான நலவாரி யத்தில் உறுப்பினர்களாக உள்ள என்ஜினி யர்ஸ், டெக்னிஷியன்ஸ் உள்ளிட்ட அனை வருக்கும் ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபா யாக உயர்த்த வேண்டும் எனவும் வலி யுறுத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு சென்னை மாவட்ட நிர்வாகி டி.மோகன் தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் க. பீம்ராவ் பேசினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் வி. ரவிசங்கர், மாநிலச் செய லாளர் கே. ரமேஷ், பொருளாளர் கே.எஸ். ஸ்ரீதர், மாநில துணைத் தலைவர்கள் எம்.எம். இஸ்மாயில், கே.எம். முக்தார் அஹமது, எல்.பி. சரவணன், துணைச் செயலாளர்கள் எஸ். அழகிரிமோகன், வி. ரமேஷ், சென்னை மாவட்ட நிர்வாகிகள் பி. சரவ ணன், பாலாஜி உள்ளிட்டோர் பேசினர்.