சென்னை,மே 29-தொழில் துறை உற்பத்தியில் பின்னடைவு, புதிய அச்சுவிதிமுறைகள் போன்ற கார ணங்களால் இந்தியாவில் லாரிகளுக்கான வாடகைக் கட்டணம் 15 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இந்தியப் போக்குவரத்து ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கடந்த ஆண்டின் நவம்பர்மாதம் முதல் இந்த ஆண்டின் மே மாதம் வரையில் லாரிகளுக்கான வாடகைக்கட்டணம் 15 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது மாதத்துக்கு 2.5 சதவிகிதம் வரை யில் சரிவு ஏற்பட்டுள்ளது. வடக்கிலிருந்து கிழக்குக்கும் வடக்கிலிருந்து வடகிழக்கு க்கும் செல்லும் சரக்குப் போக்குவரத்துக் கட்டணங் கள்தான் அதிகளவில் குறைந்துள்ளன. பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் - மே மாதங்களில் டீசல் விலை உயர்வு இல்லாத போதும், சரக்குக் கட்டணங்கள் உயர்ந்துள் ளது குறிப்பிடத்தக்கது.சரக்குக் கட்டணங்கள் குறைந்துள்ளதால் லாரி உரிமையாளர்களின் மாதாந்திர வருவாயில் பின்னடைவுஏற்பட்டுள்ளது. தொழில் துறை உற்பத்தி குறைந்து ள்ளதாலும், உள்கட்டுமானத் துறையில் குறைந்த அளவே செலவிடப்படுவதாலும், லாரி போக்குவரத்து சேவையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், கோதுமை, பழ வகைகள் உள்ளிட்ட வேளாண் பொருட்களுக் கான சரக்குப் போக்குவரத்து சற்று ஆறுதல் தருவதாக இருப்பதாக இந்தியப் போக்குவரத்து ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.பி.சிங் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.