tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிளர்ச்சி பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிளர்ச்சி பிரச்சாரம்

திருவண்ணாமலை,ஜூன்17- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க கோரியும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடை பெற்று வருகிறது.  அதன் ஒருபகுதியாக திரு வண்ணாமலை மாவட்ட த்தில் கலசபாக்கம் வட்டம், மேல்சோழங்குப்பம், மாதி மங்கலம், ஆதமங்கலம் புதூர், வீரளூர், வில்வாரணி, கீழ்பாலூர், கடலாடி, சிங்காரவாடி, காஞ்சி, வந்தவாசி வட்டம் அருங்குணம், சத்தியவாடி, தெள்ளார், தேசூர், மழையூர் பகுதிகளிலும் இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் என்.பாண்டி கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர்  கள் ச.குமரன், யாசர் அராபத், சுகுணா, வட்டார செயலாளர் பிர பாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துரிஞ்சாபுரம் ஒன்றியம் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றிய குழுக்கள் சார்பில் ஜூன் 16, 17 ஆகிய தேதிக ளில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இனம்காரியந்தல், தொடங்கி சீலப்பந்தல், கொளக்கரவாடி, கருத்து வம்பாடி, மல்லவாடி, கூத்தலவாடி, நல்லவன் பாளையம், சாவல்பூண்டி, மெய்யூர், பாலியப்பட்டு, வேங்கிக்கால் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ், ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், கிளைச் செயலாளர்கள் எஸ். ஆனந்தன், முருகையன், கோபி, ராஜகுமாரி, சேட்டு, பன்னீர், உமா, நிர்வாகிகள் அழகேசன், அசோகன், செல்வம், ராஜகோபால், கமலக்கண்ணன், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாநகரச் செயலாளர் எம்.பிரகலநாதன், நகர குழு நிர்வாகிகள் இலியாஸ் சர்க்கார், கே.நீதிமாணிக்கம், இ.தங்கமணி, வசந்த், பழனி, கௌரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளா கத்தை தூய்மை படுத்தி, மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. கீழ்பென்னத்தூர், சேத்துப்பட்டு, போளூர்  கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுகி, எம்.பிரகலநாதன், அருண் மற்றும் இடைக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். சேத்துப் பட்டில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பாரி, வட்டார செயலாளர் எல்லப்பன் மற்றும் இடைக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.  போளூர் சாலையில் திருவண்ணா மலை ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்என்.பாண்டி, மாவட்டச் செய லாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எஸ்.ராமதாஸ், ஏ.லட்சுமணன், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.