சென்னை,ஜூன்.16- சென்னை மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் சொத்துவரி, வீட்டு வரி உயர்வை கண்மூடித்தனமாக உயர்த்தியதை சிஐடியு வட சென்னை மாவட்ட மாநாடு வன்மையாக கண்டித்து ள்ளது. சென்னை துறைமுகம், ஐசிஎப், மணலி சிபிசிஎல், பால்மர்லாறி, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், சென்னை துறைமுகத்தை தனியார்க்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும், அரசு ஸ்டான்லி, ஜிஎச் , கீழ்பாக்கம் மருத்துவமனை மற்றும் துறைமுக மருத்துவ மனைகளை அதிநவீனப்படு த்த வேண்டும், அமைப்பு சாரா, நலவாரியப் பணப்பல ன்களை உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும், செங்குன்றம், கண்ணதாசன் நகர், எண்ணூர் பேருந்து நிலையங்களை முறையாக பராமரித்து பொதுபோக்கு வரத்தை பலப்படுத்த வேண்டும், பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளில் நடத்துனர்களை நியமிக்க வேண்டும், அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தகவல்தொழில் நுட்பம் நிறு வனங்களில் (ஐடி, பிபீஓ) தொழிற்தாவா சட்டம் 1947ன் படிதனது பிரச்சனைகளை தொழிலாளர் துறையில் முறையீடு செய்திட வாய்ப்பிருந்தும் உரிமை மறுக்கப்பட்டுவருவதை அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், தொழில் வளர்ச்சியில் 2வது பெரிய நகரான சென்னையில் கனரக லாரிகள், டிரக், மினி லாரிகள் என 3லட்சத்திற்கும் மேற்பட்ட மோட்டார் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
பலமடங்கு உயர்த்தப்பட்ட இன்சூரஸ் கட்டணம், அடாவடி டோல்கேட் வசூல், போக்கு வரத்து காவல்துறை மற்றும் ஆர்டிஓ அத்துமீறல்களால் இத்தொழில் பாதிப்படைந்து வருகிறது. இதற்கு காரண மான மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2017ஐ திரும்பப்பெற வேண்டும், வடசென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர்வாரி நிலத்தடிநீரை பாதுகாக்க வேண்டும், உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் இளைஞர்கள் பெருமளவில் விபத்து க்களை எதிர்கொள்கின்றனர். இவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் சட்டப் பாதுகாப்பு வேண்டும், சம்பளம், காப்பீடு வேண்டும், வழங்கப்பட்டு வந்த சம்பள குறைப்பை அரசு தலையீடு செய்து சட்டவரையறை உருவாக்க வேண்டும், சென்ட்ரல் வேர் ஹவுஸ் இராயபுரம், மாதவரம், விருகம்பாக்கம் , சிட்ல பாக்கம் போன்ற குடோன்கள் மற்றும் கான்கர் போன்ற மத்திய குடோன்களில் குறைந்த பட்சக் கூலிச் சட்டம் அமலாக்கப் பட வேண்டும். மத்திய மாநில அரசுக்குடோன்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக சனிக்கிழமை யன்று மாலை சிஐடியு மூத்த உறுப்பினர் கௌரி தேவி சிஐடியு கொடியை ஏற்றிவைத்தார். வர வேற்புக்குழு தலைவர் எம்.ராஜ்குமார் வர வேற்றுப்பேசினார். வட சென்னை மாவட்டத்தலை வர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.
மாவட்ட த்துணை தலைவர் ஆர்.அருள்குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலத்துணைத்தலை வர் ஆர்.சிங்காரவேலு மாநாட்டை துவக்கிவை த்துப்பேசுகை யில், சிஐடியு உறுப்பினர்கள் மத்தியில் பணிக்கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும், அமைப்புச்சாரா, போக்கு வரத்து தொழிலாளர்கள் தங்கள் பணியின் மூலம் மக்களை வென்றெடுக்க வேண்டும், போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகளை மீட்டெடுக்க மக்கள் ஆதரவைத்திரட்ட வேண்டும், நிலம் கைய கப்படுத்தும் மசோதாவை கார்ப்பரேட் முதலாளி களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுத்தி வருவதை தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து முறியடிக்கவேண்டும், தொழிலாளர்களுக்கான 44 அடிப்படை சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கும் முயற்சி நடந்துவருகிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பற்றச்சூழல் உள்ளது. பாஜகவின் வளர்ச்சி சாதிய ஒடுக்குமுறை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மதச்சார்பற்ற இந்திய நாட்டில் மதத் துவேசம் தலை விரித்தாடுவதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் காரணமாக உள்ளன. இந்த கொடுமைகளுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் களம்காணவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றார். மாவட்டச்செயலாளர் சி.திருவேட்டை வேலை அறிக்கையையும் பொருளாளர் வி.குப்புசாமி நிதிநிலை அறிக்கையையும் சமர்பித்தனர். ஞாயிறன்று மாலை மாநாட்டை நிறைவு செய்து மாநிலப்பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் சிறப்புரை யாற்றினார். புதிய நிர்வாகிகள் சிஐடியு வடசென்னை மாவட்டத்தலைவராக எஸ்.கே.மகேந்திரன், செய லாளராக சி.திருவேட்டை, பொருளாளராக வி.குப்புசாமி உள்ளிட்ட 68 பேர் கொண்ட மாவட்ட க்குழு தேர்வு செய்யப்ப ட்டது.