tamilnadu

img

அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி ரயில், பேருந்து இயக்க தயார்...

சென்னை;
அரசின் தீவிர நடவடிக்கை யால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி யுள்ளது. சிறு கடைகள், தொழில் நிறுவனங்கள் செய்பட தொடங்கியதால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆனாலும் பொது இடங்களில் கூடக் கூடிய எந்த அம்சங்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை. பூங்கா, உடற்பயிற்சி கூடம், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை திறக்கப்படவில்லை. பஸ், மின்சார, மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.நோய் தொற்று மீண்டும் அதிகரிக்காமல் தொழில் வளர்ச்சியை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

ஆனாலும் பேருந்து, போக்குவரத்து தொடங்குவது குறித்து அரசு முடிவு எடுப்பதில் தாமதம் காட்டி வருகிறது. பொது போக்குவரத்தை தொடங்கினால் நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மேலும் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாமா? என ஆலோசிக்கிறது.இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தொடங்குவது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும். ஆனாலும் பேருந்துகளை இயக்க தயார் நிலையில் இருக்கிறோம்.சென்னையில் 255 மாநகர பஸ்கள் முன் களப் பணியாளர்களுக்காக இயக்கப்படு கிறது என்றனர்.மின்சார ரயில் சேவையை பொறுத்தவரையில் 280 மின்சார ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக் காக இந்த சேவை இயக்கப்படுகிறது.மாநில அரசு அறிவித்தால் மின்சார ரயில் சேவை தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தற்போது மத்திய, மாநில அரசு பணியாளர்கள் மட்டும்தான் பயணம் செய்கிறார்கள் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிப்பில் மெட்ரோ ரயில் சேவை இடம் பெற்றால் இயக்கப்படும். குறைந்த அளவிலான சேவைகளை இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

;