tamilnadu

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராம் : ரஜினி சொல்கிறார்

சென்னை, ஏப். 19-சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்ப தாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்று ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு ரசிகர்களின் ஆர்வம் புரிவதாகவும் அவர்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன் என்றும் ரஜினிபதில் அளித்தார். இதே போல் சட்டப்பேரவை தேர்தல் வந்தால் எதிர்கொள் வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என்று ரஜினி பதில் அளித்தார்.அடுத்து மீண்டும் மோடி ஆட்சி அமைப்பாரா என்கிற கேள்விக்கு மே 23ந் தேதிஅது தெரிந்துவிடும் என்று கூறிய ரஜினி,ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது தேர்தல்ஏற்பாடுகள் சிறப்பாகவே இருந்ததாக குறிப்பிட்டார். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தேர்தலின் போது விரும்பத்தகாத சம்பவங்கள் குறைவாகவே நடைபெற்றுள்ள தாகவும் ரஜினி தெரிவித்தார்.

;