மாமேதை லெனின் நினைவுதினத்தை (பிப்.21) உலகம் முழுவதும் சிவப்பு புத்தக தினமாக கம்யூனிச இயக்கங்கள் கடைபிடிக்கின்றன. இதன் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் ‘புரட்சியின் துருவ நட்சத்திரம் தோழர் லெனின்’ எனும் நூல் வாசிப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பகத்சிங் சிலை முன்பு நடைபெற்ற இளங்கம்யூனிஸ்டுகளின் வாசிப்பு இயக்கத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன், பகுதிச் செயலாளர் வே.இரவீந்திரபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.