tamilnadu

நத்தமேட்டில் மறு வாக்குப்பதிவு: திமுக வலியுறுத்தல்

சென்னை, ஏப்.19- தருமபுரி மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் நடைபெற்ற வாக்குபதிவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் மட்டும் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த திமுக வேட்பாளர் செந்தில்குமார் உட்பட அக்கட்சி தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தலும், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற இடைத் தேர்தலும் நடக்கக்கூடிய பகுதி நத்தமேடு. இந்த கிராமத்தில் 4000 வாக்குகளுக்கு மேல் உள்ளதாகவும், வாக்களிக்க 4 வாக்குச்சாவடிகள் இங்கு அமைக் கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில்,பிற்பகலில் இருந்தே குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் வாக்களிக்க வருபவர்களிடம் கையில்மை மட்டும் வைத்துவிட்டு, அவர்களின் வாக்குகளை ஏஜெண்டுகள் வாக்களித் திருப்பதாக குற்றங்கள் எழுந்துள்ளது. இந்த செய்தி தனியார் பத்திரிகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபோதிலும், வாக்களிக்க பூத் சிலிப் இல்லாமலும் ஒருவர் வாக்களித்ததாக கூறப்படுகிறது.


அவரை தடுத்தபோதும் அந்த நபர் வாக்களித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அம்மாவட்ட அதிகாரி 5 முறை குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் மட்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் நத்தமேட்டில் வாக்குச்சாவடி இயந்திரத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்திற்கு மட்டுமே வாக்கு விழுந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நத்தமேட்டில் இருந்த ஒரு வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா திருப்பிவிடப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது போன்று பல்வேறு முறைகேடுகள் நடத்திருப்பதால், அந்த வாக்குச் சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள் ளார். குறிப்பாக 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதுபோன்ற முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

;