tamilnadu

img

ஆளுநர் பதவியிலிருந்து ரவியை நீக்க வேண்டும்!

சென்னை, மார்ச் 23- “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி  பதவி விலக வேண்டும். இல்லை யெனில் குடியரசுத் தலைவர், ஆளு நரை பதவி நீக்கம் செய்ய வேண்  டும்” என்று விசிக தலைவர் தொல்.  திருமாவளவன் வலியுறுத்தியுள் ளார்.

இதுகுறித்து அவர் தனது  ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதா வது:

“தமிழ்நாடு ஆளுநர் விதித்த தடைகளையெல்லாம் மீறி உச்ச  நீதிமன்ற உத்தரவின் காரணமாக  பொன்முடி அமைச்சராகி இருக்கி றார். உச்ச நீதிமன்றத்துக்குத் தவ றான தகவல்களை அளிப்பது, உச்ச  நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்  டத்துக்கு மாறாக நடந்து கொள் வது, ஆளுநருக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடு வது என தொடர்ந்து சட்ட விரோத  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கிறார் ஆளுநர்.

அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தால் தமிழிசையைப் போல  ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்து  தேர்தலில் நேரடியாகப் போட்டி யிடட்டும். அதை விட்டுவிட்டு ஆளு நர் பதவியில் இருந்துகொண்டே ஒரு அரசியல்வாதியைப் போல  செயல்படுவதும், அரசமைப்புச் சட்  டத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதும் ஏற்புடையது அல்ல.

இப்போது உச்சநீதிமன்றம் கண்டித்தது போல இதுவரை எந்த ஆளுநரையும் உச்சநீதிமன்றம் இதுவரை கண்டித்தது இல்லை. ‘ஆளுநருக்கு சட்டம் தெரியுமா... தெரியாதா?’ என்று கேட்ட உச்ச நீதி மன்றம், ‘பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க  மறுத்ததன் மூலம் உச்ச நீதிமன் றத்தை அவமதித்துள்ளார். முதல்வ ரின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலை யிட்டுள்ளார். அரசியல் சாச னத்தை ஆளுநர் முறையாகப் பின்  பற்றவில்லை’ என்றெல்லாம் கடு மையாக கண்டனங்களைத் தெரி வித்து இருக்கிறது.

இதற்குப் பிறகும் ஆளுநர் பதவி யில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே  முன்வந்து பதவி விலக வேண்டும். ஆளுநர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண் மைப் பாதுகாப்பதற்காக, அவரை குடியரசு தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.”

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.