தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ரேஷன் கடைகள் இயங்கும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகம் முழுவரும் செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக்கடைகள், 10,164 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக்கடைகளில் குடிமைப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையினை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.