tamilnadu

அநாகரீகமாக பேசிய ராமதாஸ் வருத்தம் தெரிவிக்க பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 23- தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் ஜூன் 22 அன்று சென்னையில் தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பு நடத்திய “வளர்க்கப்படுகின்ற   வெறுப்பு அரசியல்” கருத்த ரங்கில் பத்திரிகையாளர்கள் குறித்து தரம் தாழ்ந்து பேசியுள்ளார். இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலா ளர் பாரதிதமிழன் கடும் கண்டனம் தெரிவித்தி ருக்கிறார். பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் விமர்சனத்து க்குட்பட்டது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் வயது முதிர்ந்த ஒரு அரசியல் தலைவர் வாய் உதிர்த்த அநாகரீக வார்த்தை கள் கண்டன அறிக்கையில் கூட குறிப்பிடக்கூடியதாக இல்லை. பொது வாழ்வில் பக்குவமற்ற இந்த பேச்சுக்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் அவர்க ளின் தரக்குறைவான பேச்சை சென்னை பத்திரிகை யாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தனது பேச்சுக்காக டாக்டர் ராம தாஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும். முன்மாதிரி கட்சி நடத்துகிறேன் என்பவர்கள் இப்படி பேசுவது என்பது மிகப்பெரிய முரண். வயதின் காரணமாக கண்டனத்தை கவனத்துடனே  சென்னை பத்திரிகையாளர் மன்றம் பதிவு செய்கிறது. வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல் கருத்தரங்கில் வெறுப்பை கக்கிய போக்கு கண்டனத்து க்குரியது.இதுபோன்ற பேச்சுக்களை செயல்களை ஜனநாயகத்தின் உரிமை யாளர்களான பொது மக்கள் கவனித்துக் கொண்டி ருக்கிறார்கள் என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறோம். கோபம், விரக்தி, குமுறல்களை ஊடகங்கள் மீது கொட்டாதீர் என பொதுவாழ்வில் உள்ளவர்க ளுக்கு சென்னை பத்திரிகை யாளர் மன்றம் வலியுறுத்து கிறது. அரசியல்வாதிகள், காவல்துறையினர், அதிகாரிகள் என பொது வாழ்வில் உள்ளவர்கள் சமீப காலமாக பத்திரிகை யாளர்கள் மீது அமில - அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்துவதும், தாக்குதல்  நடத்துவதும், மோசமாக நடந்து கொள்வதும்  அதிகரித்து வருகிறது. இந்தப்போக்கை தொடர்ந்து கண்டித்து வருகிறோம். இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த ஊடக ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவன தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும் வேண்டுகிறோம்.