திருவண்ணாமலை, டிச.17- வெள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி போளூரில் விவசாயி கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போளூர் வட்டத்தில், ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ. 40 ஆயிரம் செலவு செய்த விவ சாயிகள் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் வெள்ள நிவாரணமாக ஒரு எக்டேருக்கு நெற்பயிர்க்கு ரூ.17 ஆயி ரம், ஒரு ஏக்கருக்கு ரூ.6,800 என அறி வித்துள்ளார். இது, பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், வாழை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வாழை, கரும்பு, மரவள்ளி கிழங்குக்கு பயிர் செய்த விவசாயிகள் நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும். மாடு, ஆடு, கோழி கள் இழப்புக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், செயலாளர் அ.உதயகுமார், பொருளாளர் அருண்குமார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தரணி ஆலை செய லாளர் கி.பாலமுருகன், சிபிஎம் போளூர் தாலுகா செயலாளர் இரா.இரவி தாசன், ரமேஷ், மதிவாணன், மணிகண்டன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.