tamilnadu

img

சென்னையில் விளையாட்டு மைதானங்களுக்கு அடியில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்

சென்னையில் விளையாட்டு மைதானங்களுக்கு அடியில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்

சென்னையில் விளை யாட்டு மைதானங்களுக்கு அடியில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மழை நீர் வீணாகாமல் பூமிக்குள் சென்று நிலத்தடி நீரை அதிகரிக்கும். இந்த திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியால் செயல்படுத்தப்படுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இதற்கான நிதியை வழங்கு கிறது. சென்னையில் உள்ள விளையாட்டு மைதா னங்களில் EcoBloc தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, நிலத்தடி மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு தொட்டி யும் ஐந்து லட்சம் லிட்டர் வரை மழை நீரை சேமிக்க முடியும். இது 45 நடுத்தர குடும்பங்களுக்கு போது மானதாகும். இந்தத் தொட்டிகள் மழைக்காலங்களில் வெள்ளத்தை குறைக்க வும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் உதவும். விளையாட்டு மைதா னங்களில் விளையாடும் குழந்தைகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. ஜெர்மன் தொழில் நுட்பத்தில், மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிப் ரொப்பிலீன் மூலம் இந்த  தொட்டிகள் தயாரிக்கப்படு கின்றன. மழைநீரை சேகரித்து, மெதுவாக நிலத்துக்குள் அனுப்பும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொட்டியிலும் 50 மீட்டர் ஆழத்தில் நான்கு போர்வெல்கள் உள்ளன. இது நிலத்தடி நீரை திறம்பட ரீசார்ஜ் செய்யும். சேமிப்பு பகுதிகள் ஜியோ-ஃபேப்ரிக் மற்றும் ஜியோகிரிட் அடுக்குகளால் மூடப்பட்டிருக்கும். இது மாசு மற்றும் பாசி உரு வாவதைத் தடுக்கும் என்று ஸ்டோன் ஹேண்ட்ஸ் ப்ரா ஜெக்ட் அண்ட் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் நிறு வனத்தைச் சேர்ந்த ஆர்.ஆர்.சிவராம் கூறினார். இந்த திட்டம் தற்போது மண்டலம் 8, 9 மற்றும் 10 இல் உள்ள எட்டு விளை யாட்டு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சென்னை ஒரு பஞ்சு போல மழை நீரை உறிஞ்சி, வடிகால்களில் வெளியேறுவதை தடுக்க முடியும்.  அசோக் நகர் இந்திரா காலனி மைதானம், ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி மைதானம், மந்த வெளி செயின்ட் மேரிஸ் மைதானம், நடேசன் பூங்கா எதிரில் உள்ள வெங்கட்நாராயணா மைதானம், ட்ரஸ்ட்புரம் மைதானம், அண்ணா நகர் கிரசண்ட் மைதானம், சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் மைதானம் மற்றும் டர்ன்புல்ஸ் சாலை ஆகிய இடங்களில் இந்த தொட்டிகள் கட்டப்படு கின்றன. நாங்கள் ஏற்கனவே சித்ரகுளம் மற்றும் வடபழனி கோயில் குளங்களில் இதே போன்ற அமைப்பை செயல்படுத்தியுள்ளோம். அவற்றின் சேமிப்பு திறன் கணிசமாக அதி கரித்துள்ளது.  நகரத்தில் இடப்பற்றாக் கறை காரணமாக, அதிக மேற்பரப்பு தொட்டிகளை உருவாக்க முடியாது. ஆனால் சாலைகளுக்கு அடி யிலும் இதுபோன்ற அமைப்புகளை நிறுவலாம் என்றும் சிவராம் கூறினார். இந்த திட்டப்பணிகள் முடிந்ததும், விளையாட்டு மைதானங்கள் பழைய நிலைக்கு மாற்றப்படும். முதலில் புல் தரை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடும் இளைஞர்கள் மைதானத்தை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். விளையாட்டு மைதானங்களில் அதிக  அளவு தண்ணீர் சேகரிக்கப் படுகிறது. அதில் பெரும் பாலானவை வடிகால்கள் அல்லது சாலைகளில் ஓடி, இறுதியில் கடலில் கலக்கிறது. இந்த புதிய நிலத்தடி அமைப்பு மூலம், தண்ணீர் சேமிக்கப்பட்டு, மெதுவாக நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்யும். இதனால் உள்ளூர் நீர்மட்டம் உயரும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார். இந்த திட்டம் சென்னை யின் வெள்ள அபாயத்தை குறைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவும். அதே நேரத்தில் விளையாட்டு மைதா னங்களின் பயன்பாட்டை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிதி உதவி யுடன் மாநகராட்சி இந்த திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் சென்னை நகரம் மழைநீரை சேமிக்கும் ஒரு சிறந்த நகரமாக மாறும்.