வேலூர், ஜூலை 16- குடியாத்தம் அருகே தட்டப்பாறை கிராமத்தில் மழைநீர் வடிகால் கால் வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பல முறை புகார் அளித்தும் அதி காரிகள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை யால் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் தாழ்வான பகுதி களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். முறையான மழைநீர் வடி கால் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி சிபிஎம் தாலுக்கா செயலாளர் சாமி நாதன் தலைமையில் சாலை யில் தேங்கியுள்ள தண்ணீ ரில் மீன் பிடிக்கும் போராட் டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை ஓரத்தில் தற்காலிக மாக பள்ளம் தோண்டி மழை நீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.