சென்னை,நவ.24- வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஞாயிறன்று மிதமான மழை பெய்தது. தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வந்த மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு குறையும் என்றும், அதன் பின்னர் மீண்டும் மழையின் தாக்கம் தமிழகத்தில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச மாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.