tamilnadu

img

நீட் தேர்வு விவகாரம்

நீட் தேர்வு விவகாரம் தொடர் பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கி ரஸ் மூத்த தலைவரும் மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவரு மான ராகுல்காந்தி கடிதம் எழுதி யுள்ளார்.

அக்கடிதத்தில்,”ஜூன் 28, 2024 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர் கல்வி அமைப்பில் உள்ள அப் பட்டமான குறைபாடுகளை அம்ப லப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப் பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் இது கவ னத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஜூன் 4, 2024 அன்று நீட்-இளநிலை முடிவுகள் குறித்த தேதிக்கு முன்னரே வெளியான பிறகு, மாணவர்களின் நீதிக் காகக் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் பெருந்தோல்வியால் பாதிக் கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது நான் ஆற்றிய உரையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை  ஈர்த்தது. தனியார் பயிற்சி நிறுவ னங்களுக்குச் செல்ல முடியாத தும் பிற வசதிவாய்ப்புகள் இல்லா ததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் சம வாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தி யுள்ளது. இது நம்முடைய பொ துக் கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும்.  மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதிவாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்ப தில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக் கப்பட்டுள்ளது. இதைப் பல வீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக் கப்பட வேண்டும். தங்களின் கடி தத்துக்காக மீண்டும் ஒருமுறை நன்றி. விரைவில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கி றேன்” என கடிதத்தில் கூறி யுள்ளார்.