tamilnadu

img

சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம்

சென்னை
கொரோனா கோரத்தாண்டவத்தில் சிக்கித்தவிக்கும் சென்னை மாநகரத்தில் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர  தமிழகத்தில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  

இந்நிலையில், சென்னை மண்டலத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மண்டல சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை வடக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மண்டலத்திற்கு ஆபாஷ்குமாரும், தெற்கு மண்டலத்திற்கு அமரேஷ் பூஜாரியும், மேற்கு மண்டலத்திற்கு அபய்குமார் சிங் ஆகியோரும்  நியமிக்கப்பட்டுள்ளனர். டிஐஜி புவனேஷ்வரி சென்னை புறநகர் பகுதிகளில் கூடுதல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

;