tamilnadu

தமிழக பாடத்திட்டத்தில் ‘க்யூஆர் கோட்’:   உ.பி. அமைச்சர் பாராட்டு

 சென்னை, ஜூன் 9- சென்னை வந்த உத்திரப்பிரதேச மாநில துணை முதல மைச்சரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான தினேஷ் சர்மா, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனோடு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார். பின்னர், இருவரும், மாநில பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.  இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் சர்மா, “தமிழ் நாடு பாடத்திட்டத்திலுள்ள க்யூஆர் கோட் முறை கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் அதனை தங்கள் மாநிலத்திலும் பின்பற்றப்போவதாகவும் தெரிவித்தார். கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், “நீட் தேர்வில் விலக்க அளிக்க வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டின் நிலைப்பாடு” என்றார். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த, 2 ஆயிரத்து 583 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக செங்கோட்டையன் கூறினார்.