கடந்த முப்பது ஆண்டுகளாகச் சிறுவர்களுக்கான கதைகள், கவிதைகள், இலக்கணம் என தொடர்ந்து வண்ணக்கதிர் குழந்தைகள் பூங்காவில் எழுதிவரும் வடலூர் புலவர் கோவி.பால. முருகு அவர்களின் சிறார் இலக்கியப் பணியைப் பாராட்டி,கள்ளக்குறிச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தினர் “தகைசால் தமிழ்ப் பணிச் செல்வர்” விருதுச் சான்றிதழையும், கடலூர், சிங்காரவேலர் சிந்தனைக் கழக அறக்கட்டளையினர் ”சிறார் கவி” விருதுச் சான்றிதழையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். வண்ணக்கதிர் குழந்தைகள் பூங்காவில் வெளிவந்த இவருடைய கதைகள் “மோகினி மதகு” “கழைக் கூத்தாடி” என இரண்டு நூல்களாகவும், பாடல்களைத் தொகுத்து “அறிவு தரும் ஏணி” என்ற கவிதை நூலாகவும், எளிய வழி இலக்கணப் பாடல்களைத் தொகுத்து “இனிக்கும் தமிழ் இலக்கணம்” என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.