tamilnadu

புதுச்சேரி மற்றும் ஆம்பூர் முக்கிய செய்திகள்

முகக் கவசம் தயாரிப்பு நிறுவனத்தில் 6 தொழிலாளர்களுக்கு கொரோனா

புதுச்சேரி, ஜூன் 15- முகக் கவசம் தயாரிப்பு நிறுவனத்தில் பணி புரியும் 6 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் செய்தியாளர்களி டம் கூறியதாவது: புதுவையில் திங்களன்று (ஜூன் 15) 8  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட 8  பேரில் 7 வயது சிறுமியும் ஒருவர்.  ஒருவர்  புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சென்னைக்கு அழைத்துச் சென்ற பிஆர்டிசி ஓட்டுனரும் ஆவார். ஒருவர் அதிக கூட்ட முள்ள பகுதிகளில் சென்றுவந்தவர் ஆவார்.  ஜிப்மரில் ஒருவரும், இந்திராகாந்தி அரசு  கொரோனா மருத்துவமனையில் 3 பேரும், என மொத்தமாக 4 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர்.  அதேபோல் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகக்கவசம் தயாரிக்கும் நிறுவ னத்தில்  ஏற்கனவே 5 தொழிலாளர்கள் தொற்  றுக்கு ஆளாகியிருந்தனர். அந்த தொழிற் சாலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த  தொழிற்சாலையில் 3 அடுக்கு முகக்கவசம், என்.95 முகக்கவசம் போன்றவை தயா ரிக்கப்படுகிறது. முகக்கவசத்தில் கொரோனா  வைரஸின் ஆயுள் 6 மணி நேரம்தான். மேலும்  அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் முகக்  கவசத்தில் கொரோனா வைரஸ் தொற்று  ஏற்படாத வகையில் பாதுகாப்பு அம்சங்க ளும் செய்யப்பட்டு இருக்கும். எனவே அந்த  முகக்கவசங்கள் மூலம் கொரோனா தொற்று  பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.  தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் யாரும் அபாய கட்டத்தில் இல்லை.  முதல்வர் நாராயணசாமி தலைமை யில் கொரோனா தொடர்பான ஆலோசனை  கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) நடை பெற உள்ளது. இதில் கொரோனா நோயாளி கள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகள் குறித்த புள்ளி விவரங்களை தெரிவிப்போம். கொரோனா பரிசோதனையின் எண்ணிக் கையை அதிகரித்துள்ளோம். அரசு மருத்துவ மனையில் 80 வரையும், ஜிப்மரில் 100 வரையும்  தினசரி பரிசோதனை நடத்த முடியும். இது வரை 10,321 பரிசோதனைகள் மேற்கொள்ளப்  பட்டுள்ளன. இதில் 9,872 பரிசோதனைகள் நெகடிவ் என்று வந்துள்ளது. இன்னும் 243 பரி சோதனைகள் முடிவுகள் வரவேண்டி யுள்ளது. புதுவையில் இதுவரை இறந்தவர்களில் 3 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்க ளுக்கு ரத்த கொதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் இருந்தன. மற்றொருவருக்கு வயது  56  ஆனால் அவர் டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இ-பாஸை தவறாக பயன்படுத்திய 2 பேர் கைது

ஆம்பூர், ஜூன் 15- தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று  அதிகரித்து வரும் நிலை யில், அதை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் சோத னைச் சாவடிகள் அமைக் கப்பட்டு காவல்துறையினர், வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் சார்பில் இரவு பகல் பாரா மல்  அனைத்து வாகனங்க ளும் சோதனை செய்யப்படு கின்றன. இ-பாஸ் இல்லாத வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. இந்நிலையில் ஆம்பூர் அருகே வசிக்கும் ஆரிஸ் அகமது (25), ஜியாவூர் ரகு மான் (29) ஆகிய இருவரும்  இ-பாஸை தவறாகப் பயன்படுத்தி தொற்று பரவும் வகையில் ஆட்களை ஏற்றிச் செல்வதாக கிராம நிர்வாக அலுவலர் ஜோதிலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆம்பூர் காவல் துறையினர் வழக்குப்  பதிவு செய்து விசாரணை நடத்தி ஆரிஸ் அஹமத், ஜியாவூர் ரகுமான் இருவரை யும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்  கள் பயன்படுத்திய 2 கார்  களையும் பறிமுதல் செய் துள்ளனர்.