tamilnadu

img

அக். 31 வரை மெரீனா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: சென்னை மாநகராட்சி

அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரீனா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி  உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோரோனா நோய் தொற்று காரணத்தினால் சென்னை மெரீனா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு  தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுப்படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்பதை அக்டோபர் 5ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து 'தமிழகத்தில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது இதனால் அக்டோபர் 31ஆம் தேதி வரை மெரீனா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு  அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.