tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்கு நெறிமுறை வகுக்க நிபுணர் குழு அமைப்பு

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள  அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  
நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இந்த குழுவினர் மாநிலத்தில் தொற்று பரவல் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள். வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வார்கள். அவர்களுக்கு அனைத்து அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;