குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் பிப் 14 முதல் நடைபெற்றுவரும் காலவரையற்ற தொடர் முழக்கப் போராட்டத்தை ஆதரித்து சிஐடியு தமிழ் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேசினார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், ராயபுரம் பகுதிச் செயலாளர் செல்வானந்தன், டி.வெங்கட், ஏ.கே.ஷாஜகான், சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
********************
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து சென்னை திருவொற்றியூர் தாங்கல் பீர்பைல்வான் தர்கா சாலையில் சனிக்கிழமையன்று (பிப்.29) இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
********************
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
********************
குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து நெல்லை மாநகரம் மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஜின்னா திடலில் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 20-ஆவது நாள் போராட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகம்மது பேசினார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீராஷா, டி.எஸ்.எம்.ஓ.உஸ்மான், ரசூல் மைதீன், முன்னாள் கவுன்சிலர் அப்துல்காதர், காங்கிரஸ் எம்.ஏ.அப்துல் காதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.