குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்தும், தில்லியில் கலவரம் ஏற்படுத்திய மதவெறியர்களை கண்டித்தும் வாலிபர், மாதர், மாணவர் சங்கங்கள் மற்றும் சிஐடியு, சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பழைய வண்ணாரப்பேட்டையில் செவ்வாயன்று (மார்ச் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.முருகேசன் (வாலிபர் சங்கம்) தலைமை தாங்கினார். பாக்கியம், பவானி, பிரேமா, லலிதா (மாதர்சங்கம்), சரவணத்தமிழன் (வாலிபர் சங்கம்), பிரசாத், இசக்கி (மாணவர் சங்கம்), எம்.ராமகிருஷ்ணன், ஏ.கே.ஷாஜகான், செல்வானந்தம் (சிறுபான்மை மக்கள் நலக்குழு), டி.வெங்கட் (சிஐடியு) ஆகியோர் பங்கேற்றனர்.