tamilnadu

img

நீட் தேர்வு ரத்து கோரி ஜூலை 15-ல் போராட்டம்

சென்னை:
இடஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி திராவிடர் கழகத்தின் மாணவர் அணி சார்பில் அனைத்து ஊர்களிலும் போராட்டம் நடைபெறும்.திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், சுகாதார, மருத்துவ உதவியைஒவ்வொருவருக்கும் அளிப்பதை உரிமையாக்க வேண்டும், தனியார் துறையில் இடஒதுக்கீடு, மத்திய தொகுப்பில் மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி திராவிடர் கழகத்தின் மாணவர் அணி சார்பில் அனைத்து ஊர்களிலும் போராட்டம் நடைபெறும். அவரவர் வீட்டு முன், முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளி விட்டு, பதாகைகள் ஏந்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பி அறப்போராட்டம் நடக்க உள்ளது எனக் கூறியுள்ளார்.

;