tamilnadu

img

ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பாதுகாத்திடுக!

சென்னை,செப்.29- ஏழை எளிய மாணவர்களின் கல்வியை பாது காக்க டி.பி. ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  தெள. சம்சீர் அகமது,மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

டி.பி. ஜெயின் கல்லூரியில் தற்போது செயல்பட்டு வரும் ஐந்து இளங்கலை மற்றும் 3 முதுகலை துறைகளை உயர்கல்வித்துறை யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 18-09-2024  அன்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தர விட்டுள்ளது. இதன் மீது உடனடியாக தமிழக அரசு தனது தீர்க்கமான தலையீட்டை செய்ய வேண்டும் என்று , இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. டி.பி.ஜெயின் கல்லூரி 1976 ஆம் ஆண்டுகளிலிருந்து ரூ.850 ஆண்டு கட்டணமாக  செயல்படும் அரசு உதவி பெறும்  சிறுபான்மை கல்லூரி ஆகும். கல்லூரி உருவாக  அரசு தனது நிலத்தையும் மற்றும் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது. தற்போது வரை கல்லூரிக்கான மானியங் களை அரசே கொடுத்து வருகிறது. இக்கல்லூரி யிருந்து ஏராளமான ஏழை , எளிய  மாணவர் களின் வாழ்நிலை மேம்பட்டுள்ளது. கல்லூரியை சுற்றிலும் அக்கல்லூரியில் பயிலும் மாண வர்களின் பெற்றோர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்துபவர்கள். அப்படி யான மக்கள் திரள் உள்ள பகுதியில் தான் டி.பி.ஜெயின் கல்லூரி இயங்கி வருகிறது. குறிப்பாக அரசால் மறு குடி அமர்த்தப்பட்ட கண்ணகி நகர் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி முதலிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் கல்லூரி கனவு இக்கல்லூரியை நம்பி இருக்கிறது. 

மேலும் பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, கள்ளுகுட்டை, பெருங்குடி, நீலாங்கரை, போன்ற பகுதியில் வசிக்கும் மாணவர்களின் தேர்வாகவும் இக்கல்லூரியே திகழ்கிறது. அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும். 

3 ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கும் கல்லூரி

2019க்கு பிறகு இக்கல்லூரியில் அரசு உதவி பெறும் துறைகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாததை கண்டித்து, இந்திய மாண வர் சங்க தலைமையில் ஏனைய முற்போக்கு அமைப்புகளை உள்ளடக்கி மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வலி யுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்துள்ளோம். அதன் பலனாக மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு சிறப்பு அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். பின் அதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் தடை  வாங்கவே, மாணவர் சேர்க்கை நடைபெறா மலே இன்றளவும் தொடர்கிறது. கிட்டத்தட்ட 830 மாணவர்களின் கல்வி வாய்ப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக முடங்கியுள்ளது. அதே கல்லூரியில் சுயநிதி பிரிவில் 13 க்கும் அதிகமான துறைகளில் எவ்வித தடையும் இன்றி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

 அத்துறைகளில் கட்டணமாக 35 ஆயிரம்  துவங்கி 90 ஆயிரம் ரூபாய் வரை  வசூலிக்கப் படுகிறது. அரசு துறைகளில் மாணவர் சேர்க்கை யை நடத்தக் கோரி பலமுறை கல்லூரி கல்வி இணை இயக்குனரை சந்தித்து மனு அளித்தும் இருக்கிறோம். இது இப்படி தொடர்கையில், தற்பொழுது வெளியாகியுள்ள  உதவி பெறும் துறைகளை ஒப்படைக்கும் நீதிமன்ற உத்தரவு  830க்கும் அதிகமான ஏழை எளிய மாண வர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதாகும். அது மட்டுமின்றி அரசின் நிலம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை வேறொரு தனியார் நிறுவனத்திற்கு மடைமாற்றி விடும் போக்காகும். 

மேல்முறையீடு செய்திடுக!

மேலும் உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஆசிரி யர் மற்றும் ஆசிரியர் பணி அல்லாத பணி யிடங்களை அரசு அதிகாரிகள் நிரப்பாதது. கல்லூரியில் ஒரு மாணவர் கூட பயிலவில்லை என்ற அடிப்படையில் துறைகளை ஒப்ப டைக்க நீதிமன்றம் சொல்லியுள்ளது. இதை அரசு ஏற்காமல் டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகத்தின் உள்நோக்கத்தை அரசின் நிலத்தை கபளீகரம் செய்யும் எண்ணத்தை கருத்தில் கொண்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மேலும் டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம் கல்வியை சேவையாக கருதாமல் வணிக மாக பார்க்கிறது. ஆகவே தான் திட்டமிட்டு மாணவ சேர்க்கையை நடத்தாமல் இருக்கிறது. மாணவர்கள் வந்தும் கூட சேர்க்கை நடை பெறவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி 2010 க்கு பிறகு பலமுறை அரசு ஆசிரியர் நியமனத்திற்கு தயாராக இருந்த போதும் அதனை கண்டு கொள்ளாமல் நிர்வாகம் இருந்துள்ளது. இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தில் சார்பாக வும் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் சார்பாக வும் டி பி ஜெயின் கல்லூரி நிர்வாகம்/தமிழ்நாடு அரசாங்கம்  வழக்கில் இடையீட்டு மனுவையும் தாக்கல் செய்துள்ளோம். கல்லூரி நிர்வாகத்தின் நோக்கம் அரசின் நிலம் மற்றும் கல்லூரியை கபளீகரம் செய்வது ஆகும். ஏனெனில் சென்னையின் மையப்பகுதியில் அமையப் பெற்றுள்ள பல ஆயிரம் கோடி மதிப்பு கொண்ட இடமாகும். இதனை அரசு கருத்தில் கொண்டு  ஏழை எளிய மாணவர்களின் குறிப்பாக மறு குடியமர்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி கனவை பாதுகாக்க டி.பி.ஜெயின் கல்லூரியை, அரசு கல்லூரியாக செயல்படுவதை தமிழக அரசும், உயர்கல்வி துறையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.