tamilnadu

img

மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியர் கைது

சென்னையில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் தனியார் கல்லூரியின் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோயம் பேட்டில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அக்கல்லூரி மாணவர்கள் இன்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
இதையடுத்து தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்மீது பெண் கொடுமை தடுப்புச் சட்டம், தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 

;