tamilnadu

பேரா. அய்யாசாமி மறைவு: ஸ்டாலின் இரங்கல்

சென்னை, ஜூன் 17- பேராசிரியர் அய்யாசாமி மறைவுக்கு தி.மு.க. தலை வர் மு.க.ஸ்டாலின்  இரங்கல்  தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய மாணவ ராகக் கல்வி பயின்ற காலத்தி லிருந்தே, திராவிட இயக்கச்  சிந்தனைகளில் ஈடுபட்டி ருந்தவரும், திராவிட இயக் கத்தின் லட்சியங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான பேராசிரி யர் அய்யாசாமி உடல் நலக்  குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு வேத னையடைந்தேன். அவரது மறைவுக்கு திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்தி இருக்  கும் அவரது மறைவால் வாடும்  குடும்பத்தினருக்கும், திராவிட இயக்கத் தோழர்க ளுக்கும் எனது ஆழ்ந்த அனு தாபத்தையும், ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.