சென்னை:
ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித்சிங் காலமானார்.
ராஷ்ட்ரீய லோக் தள கட்சியின் தலைவர் அஜித்சிங், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி வியாழனன்று காலமானார்.வி.பி.சிங், பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன்சிங், அமைச்சரவையில் இவர் இடம்பெற்றிருந்தார். முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகனான அஜித்சிங் 7 முறை மக்களவை எம்பியாக இருந்தவர்.அஜித் சிங் மறைவுக்கு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கி. வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்திருக்கும் அறிக்கையில், “சவுத்ரி சரண்சிங் மறைவிற்குப் பின் இந்தியாவுக்கு வந்து அரசியலில் ஈடுபட்டார் அஜித் சிங். மத்திய அமைச்சராக இருமுறை இருந்தவர். சமூகநீதிக் களத்தில் அவரது மறைவு ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத்துவதாகும்” என்று கூறியுள்ளார்.