tamilnadu

மனநலம் பாதித்தோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை.. உயர்நீதிமன்றம் உத்தரவு...

சென்னை:
மனநலம் பாதித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மனநலம் பாதித்தவர்களுக்க தடுப்பூசி செலுத்தக் கோரி தனியார் அமைப்பு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “மனநலம் பாதித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாமை நடத்த வேண்டும். இதற்காக பூந்தமல்லியில் உள்ள 105 ஏக்கர் மறுவாழ்வு மையத்தை பராமரித்து முகாமுக்கு பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த ஒரு மாதமாக மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

;