காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், தலைவர்கள் மரியாதை!
சென்னை, அக். 2 - மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, தில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலை வர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக் சேனா, தில்லி முதல்வர் அதிஷி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம்
சேலம், அக். 2 - மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி விகிதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கன அடி விகிதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயி ரத்து 470 கன அடியிலிருந்து, 10 ஆயிரத்து 831 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 95.04 அடியிலிருந்து 94.72 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 58.21 டி.எம்.சி.யாக உள்ளது.