நாட்டுக்கோழி வளர்ப்பு: கடலூர் ஆட்சியர் ஆய்வு
ஏழ்மையில் உள்ள பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் ‘நிறைந்தது மனம்’திட்டத்தின் கீழ் கடலூர் மற்றும் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகியநத்தம், பாதிரிக்குப்பம், பகண்டை ஆகிய கிராமங்களில் 2024-25 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் ஒன்றுக்கு 100 பயனாளி கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றி யங்களில் 1,400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு மானியமாக ரூ.22 லட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகண்டை கிராமத்தில் 8 பேரும், கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகிநத்தம் கிராமத்தில் 39 பேரும், பாதிரிக்குப்பம் கிராமத்தில் 22 பேர் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்,“இத்திட்டத்தில், ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள்.இதன் மூலம் வருமானம் கிடைப்பதோடு நாட்டுக் கோழிக் குஞ்சுகள் பெருக்கமும் அதிகரிக்கிறது”என்றார். முதலமைச்சர் நன்றி! இந்த திட்டத்தில் பயனடைந்த சித்ரா கூறுகையில்,“பகண்டை கிராமத்தில் வசித்து வரும் எனக்கு நாட்டுக்கோழி வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளது. ஆனால், எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால் முதலீடு செய்து கோழிகள் வாங்க முடியவில்லை. கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் நானும் ஒரு பயனாளியாக தேர்வு செய்யப்பட்டேன். இதில், கோழிக்குஞ்சு வளர்ப்பு பற்றிய முழுமையான பயிற்சி அளித்தனர். பிறகு, 40 கோழிக்குஞ்சுகள் வழங்கினர். இந்த திட்டத்தில் கிடைத்த வருமானம், எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். சந்திரா கூறும்போது, “அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்த எனக்கு சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கனவு இருந்தது. நானும் எனது கணவரும் தினசரி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வாழவே சிரமப்பட்டு வந்த நிலையில் என்னால் சுயதொழில் செய்ய முதலீடு செய்ய முடிய வில்லை. இந்நிலையில் கால்நடை பரா மரிப்பு துறை மூலம் 50 விழுக்காடு மானியத்தில் 40 கோழி குஞ்சுகள் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் திட்டத்தை பற்றி அறிந்தேன். இதற்கு விண்ணப்பித்தது வாயி லாக மகளிர் சுய குழு மூலம் என்னை தேர்வு செய்தனர். எனக்கு நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு முறை யான பயிற்சி அளித்து 40 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கினார்கள். அதனை நல்ல முறையில் பராமரித்து வருகிறேன்”என்றார்.