tamilnadu

img

தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் பதவியும் 60 சதவீத பணியிடங்களும் காலியாக உள்ளன... சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் பதில்....

சென்னை:
தேசிய சிறுபான்மை ஆணையத்தில் காலியிடங்களை 31.07.2021 க்குள்ளாக நிரப்ப வேண்டுமென்ற தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்றியஅரசின் பரிசீலனையில் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதிலளித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் தேசிய சிறுபான்மை ஆணையத்தில் மொத்த ஊழியர் பலம் என்ன? ஆணை யத்தின் தலைவர், உறுப்பினர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன? காலியிடங்களை நிரப்பஎன்ன நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன? தில்லி உயர்நீதிமன்றம் காலியிடங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிரப்ப வேண்டு மென்ற ஆணையை பிறப்பித்துள்ளதா? நீதிமன்ற ஆணையை அமலாக்கஎன்ன முடிவுகள்  எடுக்கப் பட்டுள்ளன என்று  சு.வெங்கடே சன் எம்.பி.,  வியாழனன்று கேள்வி எழுப்பியிருந்தார். 

நீதிமன்ற உத்தரவு பரிசீலனையில்...

இக்கேள்விக்கு ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த பதில் வருமாறு:

“1992 இல் உருவாக்கப்பட்ட தேசிய சிறுபான்மை ஆணையம் அரசியல் சாசனம், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்கள் நிறைவேற்றும் சட்டங்களின் அமலாக்கத்தை கண்காணித்து வருகிறது. இவற்றின் சிறப்பான அமலாக்கத்திற்கான பரிந்துரைகளை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு தந்தும்வருகிறது. புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து பாரபட்சங்களை களைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறுபான்மையினர் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண ஆய்வுகளை நடத்துகிறது. அரசுகளுக்கு ஆலோசனைகள் தருகிறது. காலமுறை அறிக்கைகளை சமர்ப்பிக்கிறது. தேசிய சிறுபான்மை ஆணையத்தின் மொத்த ஊழியர் பலம் 80 பேர். தற்போது 49 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் தலைவர் மற்றும் 5 உறுப்பினர்கள் பதவிகள் அடக்கம். கோவிட் காலத்தில் எழுந்த காலியிடங்கள் இவை. காலியிடங்களை நிரப்புவது என்பது பணி நியமன விதிகள் அடிப்படையில் செய்யப்படு கின்றன. இக் காலியிடங்கள் 31.07.2021 க்குள்ளாக நிரப்ப வேண்டு மென்று தில்லி உயர்நீதிமன்ற ஆணை (ரிட் மனு -சி- 1985 /2021) பணித்திருக்கிறது. அந்த உத்தரவு அரசின் பரிசீலனையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற ஆணையை உடனே அமல்படுத்துக!
அமைச்சரின் பதில் குறித்து சு. வெங்கடேசன் எம்.பி., கருத்து தெரிவிக்கையில், “80 ஊழியர் இடங்களில் 49 இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சி தருகிறது. அதிலும் தலைவர் பதவியேகாலியாக இருக்கிறது. 5 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. இந்த நிலையில் எப்படி ஆணையம் செயல்பட முடியும்? சிறுபான்மையினர் நலன்களை எப்படிஉறுதி செய்ய முடியும்? ஆகவேதில்லி உயர் நீதிமன்ற ஆணை உடனடியாக அமலாக்கப்படவேண் டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

;