சென்னை, பிப்.24 அஞ்சல் துறையின் சென்னை மாநகர மத்திய கோட்டத்தில், அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பொறுப்புக்கு, “நேரடி ஆட்தேர்வு” சென்னையில் நடைபெற உள்ளது. முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர், சென்னை மாநகர மத்திய கோட்டம், எண்.2, சிவஞானம் சாலை, (பாண்டிபஜார் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017 என்ற முகவ ரியில் மார்ச் 4 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு இத்தேர்வு நடைபெறும். கீழ்காணும் தகுதியுடை யோர் இந்த நேரடித் தேர்வில் பங்கேற்று அஞ்சலக ஆயுள் காப்பீடு / கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்களாக தேர்வு செய்யப்படுவதற்கு விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாநகர மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார். கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி,2. வயது: 18 முதல் 60 ஆண்டுகள் வரை, பிரிவுகள்: வேலைவாய்ப்பற்றோர்,சுயவேலைவாய்ப்பு பெற்ற படித்த இளைஞர்கள், முன்னாள் வாழ்வியல் ஆலோசகர்கள், எந்தவொரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் ஏஜென்டுகள், முன்னாள் படைவீர்ர், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுயஉதவிக் குழு நிர்வாகி கள் அல்லது மேற்காணும் தகுதியுடைய விருப்பமுள்ள எந்தவொரு நபர். காப்பீடு விற்பனையில் அனுபவம் உடையோர், கணினி அறிவு, உள்ளூரைப் பற்றிய தகவல் அறிந்த வர்கள்.சென்னையில் குடியிருப்போருக்கு விருப் பத்தகுதியாக கருதப்படுவர். எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது வயது தொடர்பான அசல் சான்றிதழ் மற்றும் நகல் (பேன் கார்டு இருந் தால் நல்லது), முகவரி மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன், ஒரு பாஸ் போர்ட் அளவு புகைப்படம் எடுத்து வர வேண்டும். பிற காப்பீட்டு நிறுவனங்களின் ஆயுள் காப்பீடு வர்த்தகம் செய்யும் விண்ணப்ப தாரர்கள், இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதியற்றவர்கள் ஆவர்.