tamilnadu

img

அண்ணாநகர் பகுதியில் பொங்கல் பரிசளிப்பு விழாக்கள்

சென்னை, ஜன. 30 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், மத்தியசென்னை மாவட்டம், அண்ணாநகர் பகுதியில் 3 மையங்களில் பொங்கல் விளையாட்டு விழா பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. அமைந்தகரை கிளை சார்பில்  மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி கால்பந்து போட்டி நடைபெற்றது. பகுதி தலைவர் தீபக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் மணிகண்டன், செயலாளர் மஞ்சுளா, செயற்குழு உறுப்பினர் பிரியதர்ஷினி, கிளை நிர்வாகிகள் ஷேக், அமீர், தினேஷ், முன்னாள் பகுதி செயலாளர் முத்துராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பி.பி தோட்டம் கிளை சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். பேரா. காளீஸ்வரன், மாவட்டத் தலைவர் மணிகண்டன், முன்னாள் பகுதிச் செயலாளர் உதயகுமார், மாதர் சங்க பகுதிச் செயலாளர் நாகரத்தினம், நிர்வாகிகள் விக்னேஷ், குமரவேல், கணேசன், பரந்தாமன், ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தா. பி சத்திரம் கிளை சார்பில் நடைபெற்ற பொங்கல் மற்றும் குடியரசு தின பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மஞ்சுளா, மாவட்டத் தலைவர் மணிகண்டன், பகுதி தலைவர் தீபக், மாணவர் சங்கத் தலைவர் மிருதுளா, முன்னாள் நிர்வாகிகள் சீனிவாசன், சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;