tamilnadu

img

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
பொங்கலை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்றும், பின்னர் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், சர்க்கரை மற்றும் பொருளில்லா குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.