tamilnadu

பொங்கல் பண்டிகை மெட்ரோ ரயிலில் 3 நாட்கள் கட்டணம் குறைப்பு

சென்னை, ஜன.12- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது மக்கள் மற்றும் மெட்ரோ பயணி களின் வசதிக்காக அனைத்து ஞாயிற்றுக்கிழமை கள் மற்றும் அரசு பொது விடு முறை நாட்களில் மெட்ரோ ரயில் பயண சீட்டுகளில் தற்போதுள்ள 50 விழுக்காடு கட்டண தள்ளுபடியை அளித்துள்ளது. இது 2020 ஆம் ஆண்டின் அரசு பொது விடுமுறை நாட்க ளுக்கும் பொருந்தும். அதன்படி வருகிற 15, 16, 17 பொங்கல் விடுமுறை நாட்க ளிலும் இச்சலுகை வழங்கப்படுகிறது. மேலும் காணும் பொங்கல் தினமான 17 ஆம் தேதியன்று அரசினர் தோட்டம் மற்றும் ஏஜி டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் சென்று வர வசதியாக காலை முதல் இரவு வரை மெட்ரோ சீருந்து இணைப்புச் சேவை கள் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டு உள்ளது.

;