மழை காரணமாக வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாங்குநேரி , விக்கிரவாண்டி மற்றும் புதுவையின் காமராஜர் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ கூறியதாவது, " நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமிரா மூலம்நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது், ஓரிரு இடங்களில் மழை காரணமாக வெப் கேமிரா செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தெரிவித்தார். மேலும், மழை காரணமாக வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.