அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமான வெள்ளியன்று (டிச.6) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் கௌரவ தலைவர் என்.ஜி.ஆர்.பிரசாத், சமத்துவ வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பார்வேந்தன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் அறிவழகன், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம், நிர்வாகிகள் சுப்புராம், திருமூர்த்தி, சீனு, ஹேமா உள்ளிட்டோர் பேசினர்.