tamilnadu

img

கவிதை வாசிப்பு...

பாரதியார் பிறந்தநாளையொட்டி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி,புதுச்சேரி லாஸ்பேட்டையில் நடைபெற்றது. தமுஎகச வின் தமிழ்மாநில பொருளாளர் சு.ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், புதுச்சேரி செயலாளர் உமாஅமர்நாத், பொருளாளர் கலியமூர்த்தி, கவிஞர்கள் கோவிந்தராஜன், லெனின்பாரதி, ரமேஷ்பைரவி உள்ளிட்ட திரளான கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.முன்னதாக பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு எழுத்தாளர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கள்ளக்குறிச்சிக்கு தென்பெண்ணை ஆற்று கூட்டுக் குடிநீர் திட்டம் முறையாக விநியோகம் செய்வதில்லை என்று நுகர்வோர் கூட்டத்தில் சரமாரியாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கள்ளக்குறிச்சி சாராட்சியர் அலுவலகத்தில் பொதுவிநியோகம் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் சாராட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.