tamilnadu

பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

சென்னை:
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்படுவதற்கு அனுமதித்துத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசின் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடம் இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதை ஏற்று ஆகஸ்டு 31ஆம் நாள் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட அரசாணையில் திருத்தம் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி இப்போது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் பெட்ரோல் பங்குகள், இனி இரவு 10 மணி வரை செயல்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

;